புதிய திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதி திறந்து வைப்பு. 24.07.24
வெளியிடப்பட்ட தேதி : 25/07/2024
தேனி மாவட்டம்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் மற்றும் தேவதானப்பட்டி அருள்மிகு மூங்கிலனை காமாட்சியம்மன் திருக்கோயிலில் ரூ.7.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் மற்றும் பக்தர்கள் தங்கும் விடுதியை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.