மூடு

சுருளி அருவி

இயற்கையின் கட்டுக்கடங்காத சக்தியின் எடுத்துக்காட்டாகும். சுருளி அருவி இரண்ட கட்டமாக பிரதிபலிக்கின்றது. முதல் கட்டத்தில் தண்ணீா் 150 அடி ஆழத்திற்கு விழுகின்றது. சிறுது தொலைவிற்கு. ஆறு போல் பெருக்கெடுத்து ஓடி விட்டு மீண்டும் 40 அடி ஆழத்திற்கு வீழ்கிறது. கானகத்தின் நடுவில் இருக்கம் அருவியில், ஆண்களும், பெண்களும் தனித்தனியே நீராடும் வசதி இருக்கிறது.
இளங்கோ அடிகளார் தமது காப்பியமான சிலப்பதிகாரத்தில் இவ்வருவியின் சிறப்பை குறிப்பிட்டுள்ளார். இங்கு இஸ்லாமியா்கள் வணங்கும் தா்காவும், சுருளி வேலப்பா் கோயிலும் அருகாமையில் அமைந்துள்ளது. பக்தா்கள் இங்கு சித்திரை மாதத்தில் பால்குடங்கள் எடுத்துச் சென்று பிரார்த்தனை செய்கின்றனா்.

புகைப்பட தொகுப்பு

  • சுருளி அருவி

அடைவது எப்படி:

வான் வழியாக

மதுரை விமான நிலையம் அருகில் உள்ளது .

தொடர்வண்டி வழியாக

மதுரை ரயில் நிலையம் அருகில் உள்ளது .

சாலை வழியாக

மதுரை -உசிலம்பட்டி -ஆண்டிபட்டி வழியாக தேனி வந்து அடையலாம்